என்னவளே! ................
piratheepan on Wednesday 15 June 2011
என்னவளே! உன் நினைவுகளை என்னருகில் விட்டு விட்டு தொலைதூரம் சென்றுவிட்ட உன் மனம் மாறிவிட்டதாக சில மனங்கள் சொல்ல உணர்ந்து கொண்டேன் என்னை பிரிந்து சென்று நீ புது வீடு கண்டிருப்பாய் புது ஊரு கண்டிருப்பாய் ஏன் புது உறவும் கண்டிருப்பாய் கண்டு கொண்டாயா கண்ம...ணியே புது இதயம் ஒன்று உன் கால் செருப்பில் மிதிபட்டு கசங்கி கிடந்த என் காதல் மடலும் உன் கால் செருப்பாக மாறி உன்னை காதலித்த இந்த காதலனனின் நினைவுகளும் உன் புது இதயத்தின் ஓரம் ஒரு துளி வாழ்ந்தால் வார்த்தை ஒன்று சொல்லியனுப்பு வாழ்ந்துடுவேன் அந்த வார்த்தையிலேயே ....
என் காதலுக்கு..........
piratheepan on Friday 3 June 2011
அன்பே நீ என்னை உந்தன் அடிமையாக்கினாய்
உன் கண்ணலே பேசி நீயும் காதல் சொல்கிறாய்
நெஞ்சுக்குள் நீ வந்து ஊஞ்சல் ஆடினாய்,
என் உயிருக்குள் ஏன் வந்து இம்சை செய்கிறாய்
உன் பேச்சில் நானும் மயங்கி போனேனே,
உன் பார்வை பட்டு நானும் உருகி போனேனே
மனதுக்குள் ஒழித்து வைத்த உன்தன் காதலை,
என் மன மகிழ அதை நீயும் கூறுவாயோடா
போதுமடா நீ நடத்தும் இந்த நாடகம்
இந்த பெண்மைக்குள் நீ செய்யும் இம்சை யாடையை
என் காதலுக்கு கவிதை என்ற பெயரை தந்திட்டாய்,
என் கவிதைக்கு நீ எப்போ உயிர் ஆகுவாய்.......
piratheepan on
உன்னை காணும் போது மலர்ந்த உதடுகள்
இன்று உலர்ந்து போனது என்ன ?
வேலை செய்த அலுப்பும் ,
மனதில் ஏற்படும் சலிப்பும் ,
உன்னை கண்டவுடன் ,
காணாமல் போகும் தம்பி என்பேன் நான்!
காரணம்,
அலுப்பு தீர ஆறுதல் சொன்னாய்!
சலிப்பு தீர பிரார்த்தனை செய்தாய்!
இன்றோ ,
நீ பூஜித்த கோவில் சிலைகளும் ,
உன்னால் புகழ் பெற்ற ஓவியங்களும் ,
பேசி திரிந்த வகுப்பறையும் ,
நாம்நடந்து சென்ற பாதைகளும் ,
கையில் இருக்கும் அலைபேசியும் ,
உன் தலை கொட்டிய மோதிர விரலும் ,
கை நீட்டி உன்னை காற்றில் தேடுகிறது!
ஆன்மாவுக்கு மரணம் இல்லை
என்பது மனசுக்கு புரிகிறது
என்றாலும்
உன்னிடம் "ஏன் இப்படி அவசர பட்ட என கேட்க தோணுது !
நனைந்த நினைவுகளோடும்… ..
piratheepan on Friday 27 May 2011
சிறு சிறு
தூறலாய் ஆரம்பித்து
பெரும் மழையாய் பொழிகிறது
உன் உண்மையான ஸ்நேகங்கள்!
என் கற்பனைச் சதுக்கத்தில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த
கனவுகள் எல்லாம்
அத்து மீறிப் பிரவேசம் பெற்றது
எல்லாம் உன்னைக் கண்ட பின்புதான்!
ஓ!…
என் கண்ணுக்குள்
ஒளியுமிழும்
ஒரு வண்ணப் பூச்சியாய் நீ!
என் நெஞ்சுக்குள்
இராகம் பாடும்
ஒரு சின்னப் பூங்குயிலாய் நீ!
ம்ம்…
நீயும்
உன் நினைவுகளும்
நிஜமாய் என்னுள்
நிறைந்திருக்கும்
ஆத்ம திருப்தியோடு
நம் நேசிப்புக் காலங்கள்
நித்தமும் தொடர…
பனித்துளிபோல்
பரிசுத்தமான உன் அன்பில்
இதுவரை
நனைந்த நினைவுகளோடும்…
இனி நனையப் போகும்
ஈர நினைவுகளோடும்…
நனைந்து கொண்டிருக்கிறது
தூறலாய் ஆரம்பித்து
பெரும் மழையாய் பொழிகிறது
உன் உண்மையான ஸ்நேகங்கள்!
என் கற்பனைச் சதுக்கத்தில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த
கனவுகள் எல்லாம்
அத்து மீறிப் பிரவேசம் பெற்றது
எல்லாம் உன்னைக் கண்ட பின்புதான்!
ஓ!…
என் கண்ணுக்குள்
ஒளியுமிழும்
ஒரு வண்ணப் பூச்சியாய் நீ!
என் நெஞ்சுக்குள்
இராகம் பாடும்
ஒரு சின்னப் பூங்குயிலாய் நீ!
ம்ம்…
நீயும்
உன் நினைவுகளும்
நிஜமாய் என்னுள்
நிறைந்திருக்கும்
ஆத்ம திருப்தியோடு
நம் நேசிப்புக் காலங்கள்
நித்தமும் தொடர…
பனித்துளிபோல்
பரிசுத்தமான உன் அன்பில்
இதுவரை
நனைந்த நினைவுகளோடும்…
இனி நனையப் போகும்
ஈர நினைவுகளோடும்…
நனைந்து கொண்டிருக்கிறது
‘குழி’ விழுந்த கன்னங்களில் …………
piratheepan on
மூச்சு முட்ட
என்னவளை இறுக
அணைத்தேன் அவள்
‘குழி’ விழுந்த கன்னங்களில் …………
முழுக்க முழுக்க
முத்தத்தால் நிரப்ப
முற்பட்ட வேளை
சற்றே முகம் சுருக்கி …………
தள்ளியே இருங்கள்
இப்போதைக்கு எனக்கு
இதில் ஒன்றும் உடன்பாடில்லையென்று ………..
சலிப்புடன்
காரணம் கேட்கும்
நேரமல்ல இது
என்னையறியாமலே
வெட்கப்பட்டேன்…………
எப்போதும் போலவே
அவளை ஆசையோடு
நெருன்கினேனே- ஏன்
நெருப்பாய் நடந்துகொண்டாள்…….
அப்போதுதான் புரிந்தது
கடைப்பக்கம் சென்றபோது
காட்டிய ‘பட்டுச்சேலை’
வாங்கிக்கொடுக்காது விட்டதுதான் ………………
நிஜமாகுமுன் கடலுடன்....................
piratheepan on
‘விழி’ களில் ‘விழா’ க்கோலம் கொண்ட
ஒரு ‘காதல்’ ஜோடியின் ‘கனவு’
நிஜமாகுமுன் கடலுடன் கரைந்த ‘கதை’… …………..
‘ரைற்றானிக்’ (TITANIC) மனித இனம்
மறந்திடாது மனசுக்குள் இன்னும்
பூட்டிவைத்திருக்கும் ‘மௌனம்’ கலந்த
முதற்பயணமும், முடிவுப்பயணமும்……………………..
தொண்ணூற்று ஒன்பது ஆண்டுகள்
ஓடி ஒளிந்த போதும் ஓயாத நினைவலையாக
ஒவ்வொருவர் மனக்கண் முன்னே வந்துநிற்கும்
ஆழப்பனிக்கடலுக்குள் அடங்கிப்போன
ஆயிரத்து ஐநூற்று அறுவரின்
மூச்சுக்காற்றால் உறைந்து போன
அந்தக்கப்பலின் பயணக்கதை
இன்றும் ‘கண்ணீர்’ கலந்த உப்புக் காற்றோடு………………..
மரணங்கள் எமக்கொன்றும் புதிதல்ல
இருந்தபோதும் இந்தமரணங்கள் ‘மனிதன்’
வாழும் வரை இறக்காது உயிர்வாழும்
ஏனெனில் இவர்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள்……….
காதலில் தன் சுய நலத்துக்காக ............
piratheepan on
காதலில் தன் சுய நலத்துக்காக
யார் ஒருவர் யாரை எமாற்றுகிறார்களோ
அவரால் ஏமாற்றப்பாடுபவரின்
வாழ்க்கை காப்பற்றப்படுகிறது
அதே வேளை எமாற்றுபவரது
வாழ்கை படு குழியில் அவராலே தள்ளப்படுகிறது
காதல் தோல்வியில்
தற்கொலை செய்துகொள்பவர்
எமற்றியவராக இருக்க வேண்டுமே தவிர
ஏமாந்தவர் அல்ல
தேவைபட்டால் ஏமாற்றியவர்
முன் வாழ்ந்து காடடி எமற்றியவரை
மனதார தற்கொலை செய்ய வை
அப்போது உன் வாழ்க்கைக்கு
ஒரு அர்த்தம் கிடைக்கும்
நீ கோழை என்றால்
காதலில் எமார்ந்ததும்
உடனடியாகவே தற்கொலை செய்துகொள்...
உன்னோடு சிரித்து பேசியே............
piratheepan on
அயல் மொழியையும்
எளிதில் கற்றுக்கொன்டேன்.
கலாச்சார உடையிலிருந்து
நாகரீக உடைக்கு மாறினேன்.
நம் காதலை கவிதை
எழுதி கவிஞன் ஆனேன்.
அலைபேசியை
மணிக்கணக்கில் உபயோகித்தேன்.
உன்னைப்பற்றியே எப்போதும் மனதில்
நினைத்துக் கொண்டிருந்தேன்.
உன்னோடு சிரித்து பேசியே
என் பொன்னான காலங்களை வீணடித்தேன்.
உன்னுடைய வேலையையும்
நானே பார்த்துக்கொண்டேன்.
நண்பர்களோடு நேரம் செலவழிப்பதைவிட
உன்னோடு இருக்க விரும்பினேன்.
உன்னோடு பிறந்த நாளுக்கு
பரிசு வாங்க தோழியை அழைத்து சென்றேன்.
காரணமே இல்லாமல் பலமுறை
தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
உன் ஆடையையும்
அழகினையும் வர்ணித்து பேசினேன்.
நீ கேட்காமலேயே நான் செய்த
சேட்டைகளை உன்னிடம் கூறினேன்.
இவையனைத்தும்
உன்னைக் காதலித்ததால்.
.