அழகிய வதனம் .........

on Friday 17 June 2011


ஆண்டவன் படைப்பில்
அழகிய வதனம் என்பதால்
நீ அமுதம் எடுப்பதால்
அருகிடாது மலர்வனம்
வர்ணங்களின்
வகையறா சேர்ப்பல்லவா
உன் வடிவம்
ஆயிரம் தவம் இருந்தும்
அடைந்திடமுடியாத
உன் வாழ்வினை
பெற்றிட வேண்டும் ........


என்னவள் வந்தாள் .........

on Thursday 16 June 2011



இரவு வானம் கண்விழிக்க வைகறை ராகங்கள் வட்டமிடஆயிரங்கதிரோன் 
பிரசவிக்க
காற்றின் ஜாடையில் கவிதைகள் கொஞ்ச பூக்களின் வதனங்களும் புன்னகைக்க என்னவள் வந்தாள்என்னைத்தேடி 
என்னுடன்  பேச.
                       

என்னவளே! ................

on Wednesday 15 June 2011

என்னவளே! உன் நினைவுகளை என்னருகில் விட்டு விட்டு தொலைதூரம் சென்றுவிட்ட உன் மனம் மாறிவிட்டதாக சில மனங்கள் சொல்ல உணர்ந்து கொண்டேன் என்னை பிரிந்து சென்று நீ புது வீடு கண்டிருப்பாய் புது ஊரு கண்டிருப்பாய் ஏன் புது உறவும் கண்டிருப்பாய் கண்டு கொண்டாயா கண்ம...ணியே புது இதயம் ஒன்று உன் கால் செருப்பில் மிதிபட்டு கசங்கி கிடந்த என் காதல் மடலும் உன் கால் செருப்பாக மாறி உன்னை காதலித்த இந்த காதலனனின் நினைவுகளும் உன் புது இதயத்தின் ஓரம் ஒரு துளி வாழ்ந்தால் வார்த்தை ஒன்று சொல்லியனுப்பு வாழ்ந்துடுவேன் அந்த வார்த்தையிலேயே ....

நீயாக இருக்கும் .............

on Monday 6 June 2011


ஒவ்வொருமுறை ...

என் அலை பேசி
சிணுங்கும் போதும்
எதிர்பார்ப்புடன் பார்க்கிறேன்
அழைப்பது..
நீயாக இருக்கும் என்று .....

நினைக்க மறந்துவிடுவதில்லை ........

on


சில நேரங்களில்
சிரிக்க மறந்துவிடுகிறது
என் உதடுகள்..!

சில நேரங்களில்
பசிக்க மறந்துவிடுகிறது
என் வயிறு..!

சிலநேரங்களில்
தூங்க மறந்துவிடுகிறது
என் கண்கள்..!

ஆனால்
எப்போதுமே உன்னை
நினைக்க மறந்துவிடுவதில்லை
என் நெஞ்சம்........ 

என்றும் சுகமானதே……

on


                யார் வந்து பேசினாலும் உன்
குரலே கேட்கிறது…………..!
யார் முகம் பார்த்தாலும் உன்
முகமே தெரிகிறது…………...!
இது தான் காதல் என்பதா…!
சுகமாய் நினைத்தவை இன்று
சுமையானது போல் சுகமாய்
நினைக்கும் உன் நினைவுகள்
என்றும் சுகமானதே………

என் காதலுக்கு..........

on Friday 3 June 2011


அன்பே நீ என்னை உந்தன் அடிமையாக்கினாய்
உன் கண்ணலே பேசி நீயும் காதல் சொல்கிறாய்




நெஞ்சுக்குள் நீ வந்து ஊஞ்சல் ஆடினாய், 

என் உயிருக்குள் ஏன் வந்து இம்சை செய்கிறாய் 






உன் பேச்சில் நானும் மயங்கி போனேனே, 

உன் பார்வை பட்டு நானும் உருகி போனேனே






மனதுக்குள் ஒழித்து வைத்த உன்தன் காதலை, 

என் மன மகிழ அதை நீயும் கூறுவாயோடா 






போதுமடா நீ நடத்தும் இந்த நாடகம்

இந்த பெண்மைக்குள் நீ செய்யும் இம்சை யாடையை






என் காதலுக்கு கவிதை என்ற பெயரை தந்திட்டாய், 

என் கவிதைக்கு நீ எப்போ உயிர் ஆகுவாய்.......                           

உன் வார்த்தைகளை கண்டு.......

on


உன் வார்த்தைகளை
கண்டு....
புன்னகைத்த விழிகள்
மீண்டும் நனைந்தது
உன் பிரிவுகளை
கண்டு....அதனால்
இதயத்துக்கு இன்பம்
உன் நினைவுகளால்.....
விழிகளுக்கு சோகம் 
என் பார்வைகளில்.....

கண்ணாடி பூ ஒன்று ................

on


கண்ணாடி பூ ஒன்று

   சிதறியது இன்று
     முற்க்கள் இதயத்தை
      கீறுவது நியாயமா
 
சிதறியது என் கனவல்ல
என் உயிர் அல்லவா  
உன்னை மறப்பதற்கு 
மருந்து என்ன சொல்
         மரணம் கூட சம்மதமே.....

உயிரேஉன்னிடம் ......................

on



என் உயிரே உன்னிடம் நான் கேட்பது ஒன்றே தான்... 

இதுவரை உன்னால் என் இமைகள் நனையவில்லை... 
என்னிடம் உன்னை தருவாய் என்ற நம்பிக்கையில்... 

எந்தன் மனதில் கண்ணீர் சுமையுமில்லை 
என்னை விட்டு நீ பிரியும் காலம் வந்தால்... 
புதைக்கும் மண்ணில் நான் புழுதியாவேன்...

பூமியெங்கும் .............

on Saturday 28 May 2011


ஆதாம் எங்கேயோ
ஆறடிக்குள் புதைந்து விட்டான்
ஆனால்
அவன் விட்டுச் சென்ற காதலோ
பூமியெங்கும் பூத்துக் கிடக்கிறது!

on


உன்னை காணும் போது மலர்ந்த உதடுகள்
இன்று உலர்ந்து போனது என்ன ?
வேலை செய்த அலுப்பும் ,
மனதில் ஏற்படும் சலிப்பும் ,
உன்னை கண்டவுடன் ,
காணாமல் போகும் தம்பி என்பேன் நான்!
காரணம்,
அலுப்பு தீர ஆறுதல் சொன்னாய்!
சலிப்பு தீர பிரார்த்தனை செய்தாய்!
இன்றோ ,
நீ பூஜித்த கோவில் சிலைகளும் ,
உன்னால் புகழ் பெற்ற ஓவியங்களும் ,
பேசி திரிந்த வகுப்பறையும் ,
நாம்நடந்து சென்ற பாதைகளும் , 
கையில் இருக்கும் அலைபேசியும் ,
உன் தலை கொட்டிய மோதிர விரலும் ,
கை நீட்டி உன்னை காற்றில் தேடுகிறது!
ஆன்மாவுக்கு மரணம் இல்லை
என்பது மனசுக்கு புரிகிறது
என்றாலும்
உன்னிடம் "ஏன்  இப்படி அவசர பட்ட என கேட்க தோணுது !

கனவு தேவதை .........

on


கனவு தேவதை 

தூங்க எத்தனிக்கும் நிமிடம் 

மூளையிலிருந்து ஒரு காதல் கவிதை 

வந்து விழுந்தது 

படிக்க நினைத்து 

விரித்துப் பார்கையில் 

குடைப் பிடித்துச் சென்ற 

தேவதை ஒருவளின் 

பாதங்கள் மட்டுமே பதிந்திருந்தது ....

நனைந்த நினைவுகளோடும்… ..

on Friday 27 May 2011


சிறு சிறு

தூறலாய் ஆரம்பித்து
பெரும் மழையாய் பொழிகிறது
உன் உண்மையான ஸ்நேகங்கள்!
என் கற்பனைச் சதுக்கத்தில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த
கனவுகள் எல்லாம்
அத்து மீறிப் பிரவேசம் பெற்றது
எல்லாம் உன்னைக் கண்ட பின்புதான்!
ஓ!…

என் கண்ணுக்குள்
ஒளியுமிழும்
ஒரு வண்ணப் பூச்சியாய் நீ!
என் நெஞ்சுக்குள்

இராகம் பாடும்
ஒரு சின்னப் பூங்குயிலாய் நீ!
ம்ம்…

நீயும்
உன் நினைவுகளும்
நிஜமாய் என்னுள்
நிறைந்திருக்கும்
ஆத்ம திருப்தியோடு
நம் நேசிப்புக் காலங்கள்
நித்தமும் தொடர…
பனித்துளிபோல்

பரிசுத்தமான உன் அன்பில்
இதுவரை

நனைந்த நினைவுகளோடும்…
இனி நனையப் போகும்

ஈர நினைவுகளோடும்…
நனைந்து கொண்டிருக்கிறது

           

‘குழி’ விழுந்த கன்னங்களில் …………

on


மூச்சு முட்ட
என்னவளை இறுக
அணைத்தேன்  அவள்

‘குழி’ விழுந்த கன்னங்களில் …………

முழுக்க முழுக்க
முத்தத்தால் நிரப்ப
முற்பட்ட வேளை
சற்றே முகம் சுருக்கி  …………

தள்ளியே இருங்கள்
இப்போதைக்கு  எனக்கு
இதில் ஒன்றும் உடன்பாடில்லையென்று ………..
சலிப்புடன்

காரணம் கேட்கும்
நேரமல்ல  இது
என்னையறியாமலே
வெட்கப்பட்டேன்…………

எப்போதும் போலவே
அவளை ஆசையோடு
நெருன்கினேனே- ஏன்
நெருப்பாய்  நடந்துகொண்டாள்…….

அப்போதுதான் புரிந்தது
கடைப்பக்கம் சென்றபோது
காட்டிய  ‘பட்டுச்சேலை’ 
வாங்கிக்கொடுக்காது விட்டதுதான் ………………

நிஜமாகுமுன் கடலுடன்....................

on


விழி’ களில்  ‘விழா’ க்கோலம் கொண்ட

ஒரு  ‘காதல்’ ஜோடியின்  ‘கனவு’
நிஜமாகுமுன் கடலுடன் கரைந்த   ‘கதை’… …………..



‘ரைற்றானிக்’ (TITANIC)  மனித இனம்
மறந்திடாது   மனசுக்குள்   இன்னும்
பூட்டிவைத்திருக்கும்  ‘மௌனம்’ கலந்த
முதற்பயணமும்,  முடிவுப்பயணமும்……………………..

தொண்ணூற்று ஒன்பது ஆண்டுகள்

ஓடி ஒளிந்த போதும்   ஓயாத நினைவலையாக
ஒவ்வொருவர் மனக்கண் முன்னே வந்துநிற்கும்
ஆழப்பனிக்கடலுக்குள் அடங்கிப்போன

ஆயிரத்து ஐநூற்று அறுவரின்

மூச்சுக்காற்றால்  உறைந்து போன
அந்தக்கப்பலின் பயணக்கதை
இன்றும்  ‘கண்ணீர்’ கலந்த உப்புக் காற்றோடு………………..

மரணங்கள்   எமக்கொன்றும் புதிதல்ல

இருந்தபோதும்  இந்தமரணங்கள்  ‘மனிதன்’ 
வாழும் வரை இறக்காது உயிர்வாழும்
ஏனெனில் இவர்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள்……….

காதலில் தன் சுய நலத்துக்காக ............

on


காதலில் தன் சுய நலத்துக்காக 
யார் ஒருவர் யாரை எமாற்றுகிறார்களோ 
அவரால் ஏமாற்றப்பாடுபவரின் 
வாழ்க்கை காப்பற்றப்படுகிறது

அதே வேளை எமாற்றுபவரது 
வாழ்கை படு குழியில் அவராலே தள்ளப்படுகிறது
காதல் தோல்வியில் 
தற்கொலை செய்துகொள்பவர் 
எமற்றியவராக இருக்க வேண்டுமே தவிர 
ஏமாந்தவர் அல்ல

தேவைபட்டால் ஏமாற்றியவர் 
முன் வாழ்ந்து காடடி எமற்றியவரை
மனதார தற்கொலை செய்ய வை
அப்போது உன் வாழ்க்கைக்கு 
ஒரு அர்த்தம் கிடைக்கும்

நீ கோழை என்றால் 
காதலில் எமார்ந்ததும் 
உடனடியாகவே தற்கொலை செய்துகொள்...


on



பெண்ணே 
உன் இதயத்தை தருவாயா
என் இதயம் 
என்னுடன் தினமும்

சண்டை போடுகிறது 
உன் இதயம் 
வேணும் என்று...   

காதலைப் பிரிக்க ................

on Thursday 26 May 2011


உனக்கும் எனக்குமான

காதலைப் பிரிக்க

காதலால் கூட
முடியவில்லை!

எதிர்ப்புகளைச் சுருட்டி
வெற்றிச் சரித்திரமானது
நம் காதல்!
நினைத்த பொழுது

பாயை விரிக்கும்
உரிமை பெற்ற நேரம்...
நம் காதல்.......

வாழ்க்கையின் இனிமையை...

on


அழகை மட்டுமல்ல




கண்ணீரையும் 



கண்கள் ருசிகட்டும்.



சுகம் மட்டுமல்ல

சோகமும்
வாழ்வில் உணரபடட்டும். 
வலி அறிந்தால்                                                     உணர முடியும் 
சுகம் என்னும் சுவையை...
துன்பம் வந்தால்
ரசிக்க தெரியும்
வாழ்க்கையின் இனிமையை...இன்பம் 
மட்டுமே வாழ்வானால்
அதில் ஏது இன்பம் 
சுகம் கண்ட விழி
ஓர் நாள்
சோகமும் பெற்று தெளி..

உன்னோடு சிரித்து பேசியே............

on


அயல் மொழியையும்
 எளிதில் கற்றுக்கொன்டேன்.


 கலாச்சார உடையிலிருந்து 
நாகரீக உடைக்கு மாறினேன். 


 நம் காதலை கவிதை 
எழுதி கவிஞன் ஆனேன்.


 அலைபேசியை 
மணிக்கணக்கில் உபயோகித்தேன். 


 உன்னைப்பற்றியே எப்போதும் மனதில் 
நினைத்துக் கொண்டிருந்தேன். 


 உன்னோடு சிரித்து பேசியே
 என் பொன்னான காலங்களை வீணடித்தேன்.


 உன்னுடைய வேலையையும்
 நானே பார்த்துக்கொண்டேன்.


 நண்பர்களோடு நேரம் செலவழிப்பதைவிட‌
 உன்னோடு இருக்க‌ விரும்பினேன்.


 உன்னோடு பிற‌ந்த‌ நாளுக்கு
 ப‌ரிசு வாங்க‌ தோழியை அழைத்து சென்றேன். 


 கார‌ணமே இல்லாம‌ல் ப‌ல‌முறை
 தின‌மும் தொலைபேசியில் தொட‌ர்பு கொண்டேன். 


 உன் ஆடையையும் 
அழகினையும் வ‌ர்ணித்து பேசினேன். 


 நீ கேட்காம‌லேயே நான் செய்த‌
 சேட்டைக‌ளை உன்னிட‌ம் கூறினேன். 


 இவையனைத்தும்
 உன்னைக் காதலித்ததால்.
.

இன்னும் ஓர் உயிர் .........

on



என் இதயச்சிரிப்பு 
சிரித்து கொண்டு இருக்கின்றேன்
கண்களில் கண்ணீருடன் !!!


நீ என்னை விட்டு சென்ற கணம் முதல்
நிற்க துடிக்கும் என் இதயத்தை கண்டு !!!                                

Spread The Site

Ratings

Site Stats

728 X 90 Ad slot

Ratings

Click & Free Domain Name

Blogger Widgets