என்னவளே! ................
piratheepan on Wednesday 15 June 2011
என்னவளே! உன் நினைவுகளை என்னருகில் விட்டு விட்டு தொலைதூரம் சென்றுவிட்ட உன் மனம் மாறிவிட்டதாக சில மனங்கள் சொல்ல உணர்ந்து கொண்டேன் என்னை பிரிந்து சென்று நீ புது வீடு கண்டிருப்பாய் புது ஊரு கண்டிருப்பாய் ஏன் புது உறவும் கண்டிருப்பாய் கண்டு கொண்டாயா கண்ம...ணியே புது இதயம் ஒன்று உன் கால் செருப்பில் மிதிபட்டு கசங்கி கிடந்த என் காதல் மடலும் உன் கால் செருப்பாக மாறி உன்னை காதலித்த இந்த காதலனனின் நினைவுகளும் உன் புது இதயத்தின் ஓரம் ஒரு துளி வாழ்ந்தால் வார்த்தை ஒன்று சொல்லியனுப்பு வாழ்ந்துடுவேன் அந்த வார்த்தையிலேயே ....
என் காதலுக்கு..........
piratheepan on Friday 3 June 2011
அன்பே நீ என்னை உந்தன் அடிமையாக்கினாய்
உன் கண்ணலே பேசி நீயும் காதல் சொல்கிறாய்
நெஞ்சுக்குள் நீ வந்து ஊஞ்சல் ஆடினாய்,
என் உயிருக்குள் ஏன் வந்து இம்சை செய்கிறாய்
உன் பேச்சில் நானும் மயங்கி போனேனே,
உன் பார்வை பட்டு நானும் உருகி போனேனே
மனதுக்குள் ஒழித்து வைத்த உன்தன் காதலை,
என் மன மகிழ அதை நீயும் கூறுவாயோடா
போதுமடா நீ நடத்தும் இந்த நாடகம்
இந்த பெண்மைக்குள் நீ செய்யும் இம்சை யாடையை
என் காதலுக்கு கவிதை என்ற பெயரை தந்திட்டாய்,
என் கவிதைக்கு நீ எப்போ உயிர் ஆகுவாய்.......