அழகிய வதனம் .........

on Friday 17 June 2011


ஆண்டவன் படைப்பில்
அழகிய வதனம் என்பதால்
நீ அமுதம் எடுப்பதால்
அருகிடாது மலர்வனம்
வர்ணங்களின்
வகையறா சேர்ப்பல்லவா
உன் வடிவம்
ஆயிரம் தவம் இருந்தும்
அடைந்திடமுடியாத
உன் வாழ்வினை
பெற்றிட வேண்டும் ........


என்னவள் வந்தாள் .........

on Thursday 16 June 2011



இரவு வானம் கண்விழிக்க வைகறை ராகங்கள் வட்டமிடஆயிரங்கதிரோன் 
பிரசவிக்க
காற்றின் ஜாடையில் கவிதைகள் கொஞ்ச பூக்களின் வதனங்களும் புன்னகைக்க என்னவள் வந்தாள்என்னைத்தேடி 
என்னுடன்  பேச.
                       

என்னவளே! ................

on Wednesday 15 June 2011

என்னவளே! உன் நினைவுகளை என்னருகில் விட்டு விட்டு தொலைதூரம் சென்றுவிட்ட உன் மனம் மாறிவிட்டதாக சில மனங்கள் சொல்ல உணர்ந்து கொண்டேன் என்னை பிரிந்து சென்று நீ புது வீடு கண்டிருப்பாய் புது ஊரு கண்டிருப்பாய் ஏன் புது உறவும் கண்டிருப்பாய் கண்டு கொண்டாயா கண்ம...ணியே புது இதயம் ஒன்று உன் கால் செருப்பில் மிதிபட்டு கசங்கி கிடந்த என் காதல் மடலும் உன் கால் செருப்பாக மாறி உன்னை காதலித்த இந்த காதலனனின் நினைவுகளும் உன் புது இதயத்தின் ஓரம் ஒரு துளி வாழ்ந்தால் வார்த்தை ஒன்று சொல்லியனுப்பு வாழ்ந்துடுவேன் அந்த வார்த்தையிலேயே ....

நீயாக இருக்கும் .............

on Monday 6 June 2011


ஒவ்வொருமுறை ...

என் அலை பேசி
சிணுங்கும் போதும்
எதிர்பார்ப்புடன் பார்க்கிறேன்
அழைப்பது..
நீயாக இருக்கும் என்று .....

நினைக்க மறந்துவிடுவதில்லை ........

on


சில நேரங்களில்
சிரிக்க மறந்துவிடுகிறது
என் உதடுகள்..!

சில நேரங்களில்
பசிக்க மறந்துவிடுகிறது
என் வயிறு..!

சிலநேரங்களில்
தூங்க மறந்துவிடுகிறது
என் கண்கள்..!

ஆனால்
எப்போதுமே உன்னை
நினைக்க மறந்துவிடுவதில்லை
என் நெஞ்சம்........ 

என்றும் சுகமானதே……

on


                யார் வந்து பேசினாலும் உன்
குரலே கேட்கிறது…………..!
யார் முகம் பார்த்தாலும் உன்
முகமே தெரிகிறது…………...!
இது தான் காதல் என்பதா…!
சுகமாய் நினைத்தவை இன்று
சுமையானது போல் சுகமாய்
நினைக்கும் உன் நினைவுகள்
என்றும் சுகமானதே………

என் காதலுக்கு..........

on Friday 3 June 2011


அன்பே நீ என்னை உந்தன் அடிமையாக்கினாய்
உன் கண்ணலே பேசி நீயும் காதல் சொல்கிறாய்




நெஞ்சுக்குள் நீ வந்து ஊஞ்சல் ஆடினாய், 

என் உயிருக்குள் ஏன் வந்து இம்சை செய்கிறாய் 






உன் பேச்சில் நானும் மயங்கி போனேனே, 

உன் பார்வை பட்டு நானும் உருகி போனேனே






மனதுக்குள் ஒழித்து வைத்த உன்தன் காதலை, 

என் மன மகிழ அதை நீயும் கூறுவாயோடா 






போதுமடா நீ நடத்தும் இந்த நாடகம்

இந்த பெண்மைக்குள் நீ செய்யும் இம்சை யாடையை






என் காதலுக்கு கவிதை என்ற பெயரை தந்திட்டாய், 

என் கவிதைக்கு நீ எப்போ உயிர் ஆகுவாய்.......                           

Spread The Site

Ratings

Site Stats

728 X 90 Ad slot

Ratings

Click & Free Domain Name

Blogger Widgets