அயல் மொழியையும்
எளிதில் கற்றுக்கொன்டேன்.
கலாச்சார உடையிலிருந்து
நாகரீக உடைக்கு மாறினேன்.
நம் காதலை கவிதை
எழுதி கவிஞன் ஆனேன்.
அலைபேசியை
மணிக்கணக்கில் உபயோகித்தேன்.
உன்னைப்பற்றியே எப்போதும் மனதில்
நினைத்துக் கொண்டிருந்தேன்.
உன்னோடு சிரித்து பேசியே
என் பொன்னான காலங்களை வீணடித்தேன்.
உன்னுடைய வேலையையும்
நானே பார்த்துக்கொண்டேன்.
நண்பர்களோடு நேரம் செலவழிப்பதைவிட
உன்னோடு இருக்க விரும்பினேன்.
உன்னோடு பிறந்த நாளுக்கு
பரிசு வாங்க தோழியை அழைத்து சென்றேன்.
காரணமே இல்லாமல் பலமுறை
தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
உன் ஆடையையும்
அழகினையும் வர்ணித்து பேசினேன்.
நீ கேட்காமலேயே நான் செய்த
சேட்டைகளை உன்னிடம் கூறினேன்.
இவையனைத்தும்
உன்னைக் காதலித்ததால்.
.
0 comments:
Post a Comment