நனைந்த நினைவுகளோடும்… ..

on Friday 27 May 2011


சிறு சிறு

தூறலாய் ஆரம்பித்து
பெரும் மழையாய் பொழிகிறது
உன் உண்மையான ஸ்நேகங்கள்!
என் கற்பனைச் சதுக்கத்தில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த
கனவுகள் எல்லாம்
அத்து மீறிப் பிரவேசம் பெற்றது
எல்லாம் உன்னைக் கண்ட பின்புதான்!
ஓ!…

என் கண்ணுக்குள்
ஒளியுமிழும்
ஒரு வண்ணப் பூச்சியாய் நீ!
என் நெஞ்சுக்குள்

இராகம் பாடும்
ஒரு சின்னப் பூங்குயிலாய் நீ!
ம்ம்…

நீயும்
உன் நினைவுகளும்
நிஜமாய் என்னுள்
நிறைந்திருக்கும்
ஆத்ம திருப்தியோடு
நம் நேசிப்புக் காலங்கள்
நித்தமும் தொடர…
பனித்துளிபோல்

பரிசுத்தமான உன் அன்பில்
இதுவரை

நனைந்த நினைவுகளோடும்…
இனி நனையப் போகும்

ஈர நினைவுகளோடும்…
நனைந்து கொண்டிருக்கிறது

           

0 comments:

Post a Comment

Spread The Site

Ratings

Site Stats

728 X 90 Ad slot

Ratings

Click & Free Domain Name

Blogger Widgets