‘விழி’ களில் ‘விழா’ க்கோலம் கொண்ட
ஒரு ‘காதல்’ ஜோடியின் ‘கனவு’
நிஜமாகுமுன் கடலுடன் கரைந்த ‘கதை’… …………..
‘ரைற்றானிக்’ (TITANIC) மனித இனம்
மறந்திடாது மனசுக்குள் இன்னும்
பூட்டிவைத்திருக்கும் ‘மௌனம்’ கலந்த
முதற்பயணமும், முடிவுப்பயணமும்……………………..
தொண்ணூற்று ஒன்பது ஆண்டுகள்
ஓடி ஒளிந்த போதும் ஓயாத நினைவலையாக
ஒவ்வொருவர் மனக்கண் முன்னே வந்துநிற்கும்
ஆழப்பனிக்கடலுக்குள் அடங்கிப்போன
ஆயிரத்து ஐநூற்று அறுவரின்
மூச்சுக்காற்றால் உறைந்து போன
அந்தக்கப்பலின் பயணக்கதை
இன்றும் ‘கண்ணீர்’ கலந்த உப்புக் காற்றோடு………………..
மரணங்கள் எமக்கொன்றும் புதிதல்ல
இருந்தபோதும் இந்தமரணங்கள் ‘மனிதன்’
வாழும் வரை இறக்காது உயிர்வாழும்
ஏனெனில் இவர்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள்……….
0 comments:
Post a Comment