காதல் வசம்....

on Thursday 26 May 2011



என் கண் காணா உன் உடல் மச்சம் 
அதை காண துடிக்கவில்லை என் நெஞ்சம்.. 
காதல் முன் காமம் துச்சம் 
பெண்ணே இன்னும் ஏன் அச்சம்? 

இருட்டில் எய்யப்படும் ஈட்டி கூட 
இலக்கை தாக்கும் என்பார்கள். 
இதை குருட்டு காதல் என நினைக்காதே 
விரைவில் இடம் பிடிப்பேன் உன் உள்ளத்தில் நானே.. 

என் இதயம் துடிக்கவில்லை 
நீ வைத்த காதல் பொறியால் அது 
விட்டு விட்டு வெடிக்கிறது..... 

நீ இல்லாமல் போனால் 
இனி என் குருதி பாய்ச்சலில் 
சகதி தேக்கம்... 

நீ மௌனப்புன்னகை வீசாது போனால் 
என்னுள் ஏதோ எதிர்மறை மாற்றம்.. 

நீ இல்லாத இடமெல்லாம் 
எனக்கு வழியில்லாத மர்ம தேசம்.. 

நீ பார்வை பொளிந்தாலே போதும் 
என் நிழலும் உன்னோடு பேசும்... 

உன்னோடு நான் நின்று ரசித்தால் 
நிலாவிலும் காற்று வீசும்... 

நான் சுவாசிக்கும் காற்றிலும் அன்பே 
காதல் வாசம்... 
நான் உன் காதல் வசம்!!!    

0 comments:

Post a Comment

Spread The Site

Ratings

Site Stats

728 X 90 Ad slot

Ratings

Click & Free Domain Name

Blogger Widgets